சென்னை தி நகரில் உள்ள மிகவும் பிரபலமான கடையான வேலவன் ஸ்டோர்ஸ் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மிகப்பெரிய பிரம்மாண்ட கடைதான் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். அங்கே மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் இதன் புதிய கிளை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் மிகவும் தரமாக கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாளுக்கு நான் கடைக்கு வருவோரின் கூட்டமும் கணிசமாக அதிகரித்தது.
கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் வியாபாரத்தை தொடங்கி உள்ளது.
அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி மூடப்பட்டிருந்த இந்த கடை தற்போது மீண்டும் அரசு கூறிய வழிமுறைகளை பின்பற்றி கடையை திறந்துள்ளனர்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு உறுதி அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடை செயல்பட்டு வருகின்றன. கடையில் பணியாற்றுபவர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேலவன் ஸ்டோர்ஸில் வனிதா, தீபா, பாலா, புகழ், வினோத் என பலர் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். இதனால் இது பிரபலங்களுக்கும் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது.
ஆடி மாதம் வருவதால் ஆடி ஆஃபர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி ஆஃபரை வேலவன் ஸ்டோர்ஸுடன் கொண்டாட நீங்கள் தயாரா??