நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள்.
அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கூழாங்கல் திரைப்படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், கடந்த சில தினங்களுக்கு முன் திரையிடப்பட்டது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் கூழாங்கல் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கூழாங்கல் திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் டைகர் விருது வெல்லும் முதல் தமிழ் திரைப்படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.