தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கிய டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இவற்றைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரமை வைத்து கோப்ரா என்ற படத்தை இயக்கி உள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடை பட்டு தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. சென்னை, கொல்கத்தா, கேரளா என பல்வேறு இடங்களில் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன.
20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சீக்கிரம் இந்த படத்தில் நடித்துள்ளார். ஒருவழியாக ஷூட்டிங் முடிந்த நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அஜய் ஞானமுத்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் மூன்று வருடங்களாக என் மீது கோப்ரா படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து பல்வேறு தடைகளைத் தாண்டி தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
IT’S A WRAP!! Close to 3 years of filming comes to an end!! My sincere thanks to #ChiyaanVikram sir ❤️ and my entire team who trusted me, sailed through all the struggles and difficult times with me and believed in the vision of #Cobra !! Forever indebted to each one of u! 🤗🤗❤️ pic.twitter.com/NeJIEt4Rdx
— R Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) February 15, 2022