தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மாளவிகா மோகனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் பா ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
கோலார் தங்கச் சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் 28 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
