Tamilstar
News Tamil News

ரசிகர்களுக்கு இயக்குனர் விஷ்ணு வர்தன் வேண்டுகோள்!

குறும்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணு வர்தன், அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களையும், அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட இன்னும் சில படங்களையும் இயக்கினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்யா – கிருஷ்ணா நடிப்பில் வௌியான யட்சன் படத்திற்கு பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

தற்போது கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தி படமொன்றை இயக்கி வருகிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இயக்குனர் விஷ்ணு வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உலாவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் கணக்குகள் இல்லை, அந்த பக்கங்களை எனது பெயரின் மூலம் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதனை யாரும் பின்பற்ற வேண்டாம், இதுகுறித்து ரிப்போர்ட் செய்யுங்கள் என்றும் கேட்டுக்