தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. முதல் சீசன் வெற்றிக்கு பிறகு தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் தொகுப்பாளினி அர்ச்சனா.
சமீபத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அர்ச்சனாளித்த பேட்டி ஒன்றிலும் இதே விஷயத்தை தான் திரும்பக் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேனா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார். இவர் இப்படி ட்விஸ்ட் வைத்து பேசி இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.