மார்பக புற்றுநோய் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் பார்க்கலாம்.
மார்பக புற்று நோயால் பெரும்பாலும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஒரு மார்பகத்தில் புற்றுநோய் வந்தால் மற்றொரு மார்பில் புற்றுநோய் வரவும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது
இது மரபணு மாற்றம் ஏற்படும் போது வருவதாக ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மார்பக புற்றுநோயை சில அறிகுறிகள் வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.
மார்பகத்தில் வீக்கம் கட்டி போன்ற தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் மேலும் தோல் மாற்றங்கள், சருமம் சிவத்தல், ரத்தப்போக்கு, சிராய்ப்பு, சுவாசிப்பதில் சிக்கல், அஜீரணம் , இரவில் வியர்த்தல் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
மேற்கண்ட அறிகுறிகளை கண்டால் உடனே மருத்துவர் அணுகி நோயிலிருந்து விடுபட வேண்டும்.
அதேபோல் மார்பகப் புற்றுநோயை வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலாவது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் பிறகு கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்து உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மேலும் புகை பிடிப்பது தவிர்த்து உடலை ஆரோக்கியமாகவும் சரியான எடையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.