பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து லவ் டுடே படத்தில் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி வசூலில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடிக்க போகும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
ஏற்கனவே மமீதா பைஜூ அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று சொல்லி இருந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா சர்மா மற்றும் அணு இமானுவேல் என மூன்று நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.