தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்ட தனுஷ் 18 வருடங்கள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவெடுத்து விட்டனர்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைத்தும் வீணாகிப் போனது.
தனுஷ் ஐஸ்வர்யாவை தோழி எனக் குறிப்பிட்டு விவாகரத்தை உறுதி செய்த நிலையில் ஐஸ்வர்யா சமூக வலைதளப் பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கி அவர் பங்குக்கு அவரும் விவாகரத்தை உறுதி செய்தார்.
இருவரும் பிரிந்து அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஐஸ்வர்யா 15 வயதான தன்னுடைய மூத்த மகன் யாத்ராவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் இது எந்த அளவிற்கு உண்மை என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.