News

பிரம்மாண்டமாக நடந்த பாடகி சுனிதாவின் 2-வது திருமணம்…. தொழிலதிபரை மணந்தார்

பிரபல சினிமா பின்னணி பாடகி சுனிதா. இவர் தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெற்ற காதல் சொல்வது… என்ற பாடலை பாடி பிரபலமானார். காதல் ரோஜாவே உள்ளிட்ட சில படங்களிலும் பாடி இருக்கிறார். இளையராஜா இசையிலும் பாடி உள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடி உள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்தும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சில நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை தற்போது சுனிதா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத் அருகே உள்ள அம்மாபள்ளி ஶ்ரீ சீதாராம கோவிலில் நடந்தது. ஏராளமான திரைப்பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராம் வீரபனேனியும் சில வருடங்களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

ரத்த அணுக்கள் அதிகரிக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!

ரத்த அணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலருக்கு உடலில் ரத்த அணுக்கள் குறைவாக…

8 hours ago

“தமிழக வெற்றி கழகத்தை காண மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன்”:சீமான் பேச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில்…

8 hours ago

கோட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட வெங்கட் பிரபு ,வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி…

9 hours ago

அச்சு அசலாக பெண் போலவே மாறிய ஆங்கர் அசார், போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக வலம் வருபவர் அசார். சமூக வலைதளங்களில்…

9 hours ago