தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இப்படியான நிலையில் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வழக்கமான பரிசோதனையின் போது மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனால் மதுரை மற்றும் கேரளாவில் இருந்து இரண்டு மருத்துவர்கள் வரவைக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
வெளிவந்த தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அஜித் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.