தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் கோவிலுக்கு யார் யாரெல்லாம் கார்ல போனீங்க என்று கேள்வி கேட்க கரிகாலன் நான் கதிர் மாமா கிள்ளிவளவன் என உண்மையை உளறி விடுகிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்ட ஜான்சி ராணி ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளிடம் இதுவரைக்கும் உங்ககிட்ட வம்பு வேனான்னு இருந்தேன் ஆனா இனிமே அப்படி இருக்க மாட்டேன் என கூறுகிறார்.
வெளியே போன பெண்கள் எல்லோரும் சக்தியுடன் வீட்டிற்கு வர கதிர் கோபமாக வந்து வீட்டை விட்டு வெளியே போடா என்று சொல்ல குணசேகரன் டேய் சக்தி உன் பொண்டாட்டி கூட்டிகிட்டு உள்ள வா என கூறுகிறார்.