தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் மகேஷ்பாபு. இவரது தந்தை கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராவர். 79 வயதான இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவரை குடும்பத்தினர் ஹைதாரபாத் கச்சி பவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பரபரப்பான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.