Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருள் வாக்கு கேட்டு நடுங்கிப் போன குணசேகரன், ஜனனி சொன்ன வார்த்தை, இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்

ethir neechal serial episode update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன் தர்ஷினிக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருக்க ஜனனி போலீசை சந்தித்து சித்தார்த்தை அவங்களே எங்கேயோ மறைத்து வைத்துவிட்டு அந்த படிய எங்க மேல போடுறாங்க, எங்களை குற்றவாளியாக்க பாக்குறாங்க என்று கூறுகிறார்.

மறுபக்கம் சாமியாடி மாமா மீது மதுரவீரன் இறங்கி இதுவரைக்கும் நீ நெனச்சதெல்லாம் நடந்துச்சு ஆனா இனிமே நடக்காது என்று குணசேகரனை எச்சரிக்க அவர் வெளவெளத்துப் போகிறார்.

அடுத்ததாக சக்தி சித்தார்த் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு தைரியமா அதை வெளியில சொல்ல முடியல உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம் என்று சட்டையை பிடித்து கேட்க சித்தார்த் ஏதோ ஒரு உண்மையை போட்டு உடைக்கிறார்.

சாமியாடி மாமா சொன்ன வார்த்தையை கேட்ட ரசிகர்களும் அவர் சொன்ன மாதிரியே இனிமே குணசேகரன் நினைக்கிறதெல்லாம் நடக்காமல் இருக்கணும், இந்த சீரியல் பாசிட்டிவ்வா கொண்டு போனா நல்லா இருக்கும், பழைய பார்முக்கு வந்துடும் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

ethir neechal serial episode update
ethir neechal serial episode update