தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் பிரமோஷனுக்காக நெல்சன் திலீப் குமார் அவர்கள் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டியில் பீஸ்ட் படத்தை முதன்முதலாக பார்த்தது யார் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அனிருத் தான் முதன்முறையாக இந்த படத்தை பார்த்ததாக கூறியுள்ளார். நான் இயக்கிய முதல் இரண்டு படங்களையும் முதலில் அனிருத் தான் பார்த்த அதே போல் இந்த படத்தையும் முதன்முதலாக அவர்தான் பார்த்தார் என தெரிவித்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.
மேலும் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்க அனிருத் தான் முழு காரணம் என ஏற்கனவே நெல்சன் திலீப் குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.