தமிழ் சினிமாவில் இருவரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இருவரும் ராஜாவின் பார்வையிலேயே, நேருக்கு நேர் ஆகிய படங்களில் இணைந்து நடித்த நிலையில் அதன் பிறகு ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை. ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருவருக்குள்ளவும் இருந்து வருகிறது. ஆனால் இதுவரை யாரும் இருவரையும் இணைத்து நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளவில்லை.
இப்படியான நிலை பல வருடங்களுக்கு முன்னர் அஜித் பேட்டி ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். விஜய் ஒரு படம் எடுத்தால் அந்த படத்தில் ஆயிரம் பேர் வேலை செய்வார்கள். இதனால் ஆயிரம் குடும்பங்கள் வாழும். அதேபோல் என்னுடைய படத்தால் ஒரு ஆயிரம் குடும்பங்கள் வாழும். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த அந்த எண்ணிக்கை குறைந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் இருவரும் எதிரிகள் இல்லை எல்லா துறையிலும் இருப்பது போல எங்களுக்கிடையேயும் போட்டி இருக்கிறது அவ்வளவுதான் என தெரிவித்துள்ளார்.