தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக வருகிறது. இதனை முடித்த பிறகு விஜய் 2 வருடம் பிரேக் எடுத்து 2026-ம் ஆண்டு அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
இப்படியான நிலையில் இந்த இடைவெளிக்குள் மேலும் ஒரு படத்தில் நடித்து விடலாம் என முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குவில் ராஜா மௌலி இயக்கத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்த RRR படத்தின் தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.